...

15 views

விழிகள் தேடும் விசித்திரம்
விழிகள் தேடும் விசித்திரம்
......

கலைத்திட‌ இயலாக் கனவுகளுண்டு
கண்களில் புதைந்த காட்சிகளாய்...
கைகளில் எடுத்துக் காகிதத்தில்
கண்ணீர் உலர்ந்திடத் தூவுகிறேன்...

பணமே வாழ்க்கை என அலையும்
குணம் கொண்ட மனிதரின் சுரண்டலிலே
பிணமாய்ப் போகும் ஏழைகளின்
பிணியாம் பசியும் அழிந்திடுமா?

சாதிப் பேயின் சதிவலையால்
சாகும் காதல் உயிர்த்திடுமா?
உலகில் அனைவரும் ஒன்றென்று
ஊரார் உள்ளம் உணர்ந்திடுமா?

தெவிட்டாச் சுவையாள் தேன்தமிழாள்-அவள்
தேவையை அகிலம் அறிந்திடுமா?
பெண்ணை மண்ணென எண்ணும் வஞ்சப்
பேதையர் நெஞ்சம் திருந்திடுமா?



நெஞ்சில் கனவுகள் ஆயிரம்தான்
நித்தமும் வலியைக் தருகிறதே
தைலம்‌ பூசும் நாள்தேடித்
தையல்‌ உள்ளம் தவிக்கிறதே
© த.கிருத்திகா