...

22 views

காதல் அகதியின் கடிதம்
அடைக்கலம் தேடிய அகதி நான்- உன்

அன்பெனும் சிறையில் அடைபட்டேன்!

விடுதலை மட்டும் தந்துவிடாதே

விசித்திர மன்னா உன்சிறை வரமே!

ஆசைகள் அனைத்தையும்

அழித்து அழித்தே தேய்ந்த இதயம்

இன்று ஏனோ அடம்பிடிக்கிறதே !

ஆறுதலோடு அறிவுரை சொல்வாய்
ஆருயிரே!

அன்பே! உந்தன் அழகிய கூண்டில்

அடிமை நானும்
அடைந்திட வேண்டும்!

உயிரே உந்தன் பூமடி சாய்ந்து
ஒருசில நொடிகள் உறங்கிட வேண்டும்!
© த.கிருத்திகா