காதல் அகதியின் கடிதம்
அடைக்கலம் தேடிய அகதி நான்- உன்
அன்பெனும் சிறையில் அடைபட்டேன்!
விடுதலை மட்டும் தந்துவிடாதே
விசித்திர மன்னா உன்சிறை வரமே!
ஆசைகள் அனைத்தையும்
அழித்து அழித்தே தேய்ந்த இதயம்
இன்று ஏனோ அடம்பிடிக்கிறதே !
ஆறுதலோடு அறிவுரை சொல்வாய்
ஆருயிரே!
அன்பே! உந்தன் அழகிய கூண்டில்
அடிமை நானும்
அடைந்திட வேண்டும்!
உயிரே உந்தன் பூமடி சாய்ந்து
ஒருசில நொடிகள் உறங்கிட வேண்டும்!
© த.கிருத்திகா
அன்பெனும் சிறையில் அடைபட்டேன்!
விடுதலை மட்டும் தந்துவிடாதே
விசித்திர மன்னா உன்சிறை வரமே!
ஆசைகள் அனைத்தையும்
அழித்து அழித்தே தேய்ந்த இதயம்
இன்று ஏனோ அடம்பிடிக்கிறதே !
ஆறுதலோடு அறிவுரை சொல்வாய்
ஆருயிரே!
அன்பே! உந்தன் அழகிய கூண்டில்
அடிமை நானும்
அடைந்திட வேண்டும்!
உயிரே உந்தன் பூமடி சாய்ந்து
ஒருசில நொடிகள் உறங்கிட வேண்டும்!
© த.கிருத்திகா