...

8 views

உன் இறைவன் இருந்தால்...
உம் இறைவன் இவனால் இப்புவி இன்று நிர்கதி அதை நீயே மெய் அறி.

கையறு கொண்ட இந்நிலை உம் இறைவன் பாசக்கயிரு கொண்டு தீட்டிய சமனிலை?

ஊழியம் செய்த உம் இறைவனிடத்தில் ஊழிக்கரைக்கு வழியுண்டோ?

ஊழ்வினைவரின் உணர்ந்தே மறிப்பேன், என் உற்றவரின் மரணத்தின் திறவுகோலாய் உனையும் எனையும் வைப்பானேன் உம் இறைவன்?

மூத்தோன் உம் இறைவன் முதுமக்கள் தாழி செய்ய வேண்டியே இத்தாலியனை படைத்தானோ?

இறைவனவன் எவனாயினும் எதுவாயினும் இறைதன்மை தேடும் தன் சேய் அனைத்தும் இரையாக்கும் உம் இறைவன் அறநினும் பெரிதோ?

என் தலைமேல் வானளாவி ஆட்சி செய்யும் உம் இறைவனவன் ஈரோ? நூறோ?
உலகின் மொழி அன்பினும் உயர்ந்தவன் எனின், சிரியச்சிறுவனின் ஓலமும், இத்தாலிய இடுகாடுகளின் செந்தணலும் நின் துதியும், தூபமும் ஆகட்டும்!

நாத்திகம் பேசி உன் பல்லாயிரம் கடவுளரை நிந்தித்தாலும், யானும் நீயும் பூவுலம் பிரிய வலியதோர் தோல்வி தேவை. மனிதம் ஏந்தி மானுடம் காக்கப்போராடித்துணை நிற்போம்!