...

18 views

பாடும் நிலா பாலு
காந்த குரலின் சொந்தக்காரர்
நன்றாகப் பாடும் பாட்டுக்கார் மண்நுலகத்தை மகிழ்வித்த மனிதன்
இன்று விண்ணுலகத்தை மகிழ்விக்க சென்றான்
குரலால் மனிதனை மயக்கியவன்
இன்று அதே குரலால் இறைவனை மயக்கச் சென்றான்
40 ஆயிரம் பாடல்களைப் பாடியவன்
அவன் பாட்டுக்கு நான் நாட்டியம் அடியவன்
மனித நேயத்துடன் வாழ்ந்தவன்
இன்று மனித இனத்தை விட்டு விலகியவன்
மூச்சை அடக்கி பாடியவன்
இசையில் தாண்டவமாடி அவன்
இறைவனே
இவரின் குரலைக் கேட்க இவரை அழைத்துச் சென்றாயோ
ஓய்வில்லாமல் பாடியவன் இன்று ஓய்வெடுக்கிறான்
கொடூரமான ஆண்டு 2020
ஒரு மாமனிதனை காவு வாங்கிய ஆண்டு
பாடும் நிலா பாலு
இறைவன் பாட்டை பாடி இறைவனடி சேர்ந்தார்
அவனது பிறப்பின் சக்தி கொடுத்தார்
அவருக்கு நிறைய பக்தி கொடுத்தார்
நிறைய அவருக்கு கற்றுக் கொடுத்தார்
இன்று அவருக்கு முக்தி கொடுத்தார்
தமிழும் இசையும் வாழும் வரை
உன் குரலும் புகழும் வாழும்


© Siva