...

2 views

காதல் ஆத்திசூடி
அன்பே
நீயே
ஆருயிர் என்ற
பதத்தின் பொருளே
இதயம் இன்றியும்
உயிர் வாழும் உறவே
ஈடிணை இல்லா
நேசத்தின் நேர்த்தியே
உயிர் வரை சென்று
இனிக்கும் உறவே
ஊனையும் உருக்கும்
உலையின் நிலையே
எண்ணங்கள் ஒருமித்து
வண்ணங்கள் கோர்க்குமே..
ஏழுலகிலும் இல்லை
இதற்கிணை என்றாகுமே
ஐம்புலனின் அழுத்தத்தில்
நொறுங்கும் ஜீவனே
ஒவ்வொன்றாய் எண்ணி
எடுத்துக் கோர்க்கவே
ஓங்கிய கலசத்தை
தாங்கும் தளம் போலவே
ஒளவை சொன்ன
ஆத்திசூடி வழியே
அஃதே எண்ணினேன்
காதல் உயிர் எழுத்து என நாடியே/
© Tamil