...

8 views

உன்னால் நான்
தொடுவானமாய் நீ
உன்னுள் தோன்றிடும் நிலவாய் நான்
அதிகாலை சூரியனாய் நீ
உன்னால் வாழும் மலராய் நான்
சுவாசிக்கும் காற்றாய் நீ
உன்னால் வாழும் உயிராய் நான்
வானில் இருந்து பொழியும் மழைத்துளியாய் நீ
உன்னால் எழும் தளிராய் நான்
வண்ணமாய் நீ
உன்னால் அழகாகும் பட்டாம்பூச்சியாய் நான்
இமையாய் நீ
உன்னால் பாதுகாக்கப்படும் விழியாய் நான்
கடற்கரை விளக்காய் நீ
உன்னால் வழி அறியும் மாலுமியாய் நான்
இறகுகளாய் நீ
உன்னால் பறந்திடும் பறவையாய் நான்


© All Rights Reserved