![...](https://api.writco.in/assets/images/post/user/poem/120221211032922109.webp)
14 views
பாரதியார்...!
பாரதி யாரென்று
வினவாதே...
இப்பாருக்கு
தானொரு தீயென்று
நிரூபித்து போனவன்...
கண்கள் சிவக்க
நரம்புகள் புடைக்க
மீசைமுடி துடிக்க
தமிழால்
இத்தரணி ஆண்டவன்
அவன்....
ஆண் பெண் பேதமில்லை
குலம் உயர்வு தாழ்வு
ஏதுமில்லை
அன்பென்றே
கொட்டு முரசே என்று
எம்அகிலத்துக்கும்
நெறியூட்டிப் போனவன்...
தமிழே உன்னை
தீண்டாமல் நானில்லை
உன்னை தீண்டியதால்
எனக்கு இறப்பில்லைஎன்று
இன்றும் தமிழால்
வாழ்ந்து கொண்டிருப்பவன்
என் முண்டாசுக் கவி....
கரும்பாறையிலும்
சிறு ஈரம் உண்டு
காட்டுத் தீயாய் பரவிக்கிடக்கும்
இவண் கவிதைகளிலும்
பெரும் காதலுண்டு
அவள்தான் கண்ணம்மா...
காலங்கள் கடந்தாலும்
அழியாப்புகழாய்
என்றும் நிலைத்திருக்கும்
எம் கவிஞனுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
பாரதியை இப்பாருக்கு
கொடுத்த தமிழே உன்னை
தலை வணங்குகிறேன்...!
© நித்திலன்...🎭
வினவாதே...
இப்பாருக்கு
தானொரு தீயென்று
நிரூபித்து போனவன்...
கண்கள் சிவக்க
நரம்புகள் புடைக்க
மீசைமுடி துடிக்க
தமிழால்
இத்தரணி ஆண்டவன்
அவன்....
ஆண் பெண் பேதமில்லை
குலம் உயர்வு தாழ்வு
ஏதுமில்லை
அன்பென்றே
கொட்டு முரசே என்று
எம்அகிலத்துக்கும்
நெறியூட்டிப் போனவன்...
தமிழே உன்னை
தீண்டாமல் நானில்லை
உன்னை தீண்டியதால்
எனக்கு இறப்பில்லைஎன்று
இன்றும் தமிழால்
வாழ்ந்து கொண்டிருப்பவன்
என் முண்டாசுக் கவி....
கரும்பாறையிலும்
சிறு ஈரம் உண்டு
காட்டுத் தீயாய் பரவிக்கிடக்கும்
இவண் கவிதைகளிலும்
பெரும் காதலுண்டு
அவள்தான் கண்ணம்மா...
காலங்கள் கடந்தாலும்
அழியாப்புகழாய்
என்றும் நிலைத்திருக்கும்
எம் கவிஞனுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
பாரதியை இப்பாருக்கு
கொடுத்த தமிழே உன்னை
தலை வணங்குகிறேன்...!
© நித்திலன்...🎭
Related Stories
11 Likes
2
Comments
11 Likes
2
Comments