...

10 views

தமிழ் செல்வியின் கவிதை பேச்சுக்கு காதலன் யாரோ !
தமிழ்ச் செல்வியின் கவிதை பேச்சுக்கு காதலன் யாரோ !
முத்தமிட்டே தொடங்கும் தமிழ் அது வருடிச்செல்லும் பூங்காற்றாய்
அடியில் தொடங்கி முடி வரை தேனை பாய்ச்சுகிறது

கொள்ளை கொள்ளும் இதயங்களும்
கொள்ளை போகும் நெஞ்சங்களும்

பால் நனைத்த வெண்ணிலா தேன் நனைத்து ஊட்டும்
அமுதது ஆசைத் தீயாய்
தேகம் யாவும் குளிர்ந்த வெப்பத்தில் நிறைந்த மனம்

அவள் எச்சில் பட்ட வார்த்தைகள் தேன் தமிழ் அமுதாய்
அவள் எண்ணம் தொட்ட வார்த்தைகள் கார்குழல் இசையாய்

அடுக்கிய வார்த்தைகளும் அமைதிப் பேச்சுகளும்
பார்க்கும் விழிகளும் பறிபோகும் நெஞ்சமும்

அவள் பேச்சிலே மயங்கி நெஞ்சிலே தாங்கம் காதல் கோட்டை ஒன்று உருவானதோ

தமிழ்ச்செல்வியின் வாய் மொழிகளுக்கு தமிழரசனின் அன்பு கவிதைகள்
தமிழ்ச்செல்வியின் மான்விழிகளுக்கு தமிழ் மைந்தனின் யாழொலிகள்

உன் பேச்சிலே மெட்டமைத்து உனை காதல் கொள்ளவா
எந்தன் இசைப்பயணம் உன் பொன் மொழிகளோடு தொடரட்டும்

உள்ளங்களை கொள்ளை கொண்டு நெஞ்சங்களை நமதாக்கி
அன்பில் ஓர் காதல் செய்வோம் முத்தமிழ் ஒலியில் மெத்தைகள் புரள !
© Iy Thamizhanda