...

9 views

பூ வனம் புது மணம்
#PoetryChallenge
புலரும் பொழுதில்
நாசியில் மணத்திடும்
நாவில் ருசித்திடும்
இனியதொரு பானம்!
புது மலர் சிலிர்த்திட
பூ மகள் ஜொலித்திட
பூந்தூரலாக பொழிந்திடும்
பனி ;மலர் வனம் குளித்திட
மகிழ்ந்து மனம் பாடிடும்
சிந்து; நேரமும் விரைந்திடும்
நெஞ்சமும் நிறைந்திடும்!
எண்ணங்கள் வரைந்திடும்
கவிதை வரிகள் இயற்கை
அன்னையின் எழில் உருவம்
கண்டு பொங்கிடும் புதுப் புனல் என்றே!