...

4 views

ஞாபகங்கள்...புனிதமானது
ஒன்றா இரண்டா ஞாபகங்கள்
வாழ்க்கை ஏடுகளில் புதைந்தன
எண்ணிலடங்கா ஞாபகங்கள் ....


சொற்களின் துணை கொண்டு
வடித்திட தான் நினைக்கிறேன் ,
பொக்கிஷங்கள் இரகசியமானவை
என்றது மனதும் ....


சில ஞாபகம் நினைவின் நீட்சியில் ...
நீங்காமல் உடன் வரும் நினைவலைகளில் ..


உதட்டோரம் புன்னகையை பரிசளிக்கும்
ஞாபகங்களே மிகவும் நெருக்கமாக
என்னுடன் என்றும் பயணிக்கும் ..


துன்பங்களும் துயரங்களும் ஞாபகங்கள் அல்ல என்பதும் !....


செப்பனிடும் அனுபவங்களாக...
ஏற்றுக்கொண்டேன்


அதனால் ...


இன்று எழுதவும்
பழகிக் கொண்டேன்
ஞாபகங்களை...


கதைகளும் , கவிதைகளுமாய்...
சிரிக்கின்றன ஞாபகங்களே !....


🌹🌼🌹🌼🌹🌼

piyu
© All Rights Reserved