...

2 views

பணக்கிறுக்கா…
துட்டு துட்டுன்னு
துடிக்குதிங்கே இனமே
பணம் கட்டுக் கட்டா
சேர்குதிங்கே குணமே

இல்லார்க்கெல்லாம் நல்லார்
உள்ளம் மனமே
அந்த பொல்லார்க்கெல்லாம்
பொங்கிவருது சினமே

முட்டாள் பயலே
மூளையிருக்கா
மூட்டை கட்டிய
பணக் கிறுக்கா

கொட்டிய பணத்தில்
கோட்டையில் தூங்குற
குறட்டை விட்டே
கொழுத்து வீங்குற

தட்டிய கதவை
தர மறுக்குற
ஒட்டிய உறவை
எட்டி உதைக்குற

திட்டிதீக்குற
தீமைசேக்குற
வட்டியும் முதலும்
வாட்டிவதைக்குற

கட்டளை யிடுவான்
கடன் கொடுத்தவன்
காலத்தின் ஆக்கத்தை
அவன் படைத்தவன்

பட்டிடும் முன்னே
பாக்கியம் பண்ணு
இல்லை
முட்டிடும் வேளையில்
நெருப்பினை தின்னு


#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes


© aV ​✍🏾