...

11 views

அன்பின் புலம்பல்!
தாய் பாசம்
தந்தை கண்டிப்பு
இல்லாமல் வாழலாம்
என்று நினைத்த...
இதயம்

இன்று உணர்கிறது!
அவர்கள் இல்லையென்று
அவர்கள் இருந்தால்
அவளின் பிடிவாதம்
அவளிடத்தில்
இருந்திருக்கும் ...

அவள் ஆசைகள்
அவள் கைசேர்ந்திருக்கும்
அவர்கள் இருந்தால்
அவள் மனம்
சுதந்திரம் பறந்திருக்கும்

அவள் பேசியிருப்பார்
தன் மனதை விட்டு...

என் செய்வது
அவள் செய்த பாவம்
என்று நினைக்கிறேன்!

அவள் வளரும்போது..
அவர்கள் உதிர்வது!

இப்போது உணர்கிறாள்
அவள் தாய் மனதை
அழுகையை துடைக்க
கைகள் இல்லாமல் ...

அவளின் அழுகைக்கூட
சுதந்திரமின்றி அவளின்
கண்ணுக்குள்ளே புதைந்தது!

என் பாவம் செய்தது
அந்த கண்ணீர்!

~~~~~~~~~~~~
பெற்றவரின்றி
மற்றவரால் கிடைக்கும்
அன்பு கூட இரவலே!
© Nuradhaag