...

4 views

மன குமுறல்
வாழ்க்கை எனும் சிறையில் ஆயுள் கைதியானேன்
மனுவை மறுபரிசீலனை செய்திடுங்கள்
பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை போல
என் உள்ளத்தில் தேங்கி நிற்கின்றன பல கனவுகள்
கனவுக்கு செயல் கொடுங்கள்
என் பிதற்றலுக்கு செவி கொடுங்கள்
இன்னொரு முறை வராதா என பலர் ஏங்கி தவிக்கும் இளமையிலே
வெளுத்ததெல்லாம் பால் என்று
பெரும் வேதனை குழியில் விழுந்தவன் நான்
வெற்றிக் கணிப்பரித்த வீண் பெருமை பேசாமல்
பற்றி கொடி படர தேர்ந்த
பாரி யை போல்
பள்ளத்தில் விழுந்த எனக்கு கை கொடுங்கள்