...

6 views

வாதை!
எதிர் எதிராக நிற்கிறோம் எதிர்ப்பாகத்தானா...?
எதற்காக என்பதுதான் புரியவில்லை..

நிசப்தமான இரவுகளில் சூழும் பேரமைதி
சில நேரங்களில் பைத்தியமாக்கி கிறுக்க வைத்துவிடுகின்றன...

உன்னோடு பகிர இயலாத
இந்த காதலை நான் ஆழ்ந்து வாசித்தால்தான் என்ன?

இல்லை வலிகளை வரிகளில்
அழுது தீர்த்தால்தான் என்ன?

கண்டும் காணாமல் போய்விடு
இம்மைக்கும் மறுமைக்கும்
பகிரப்படாத இக்காதலன்றே போதும்!
மீண்டும் மீண்டும் நானும் எனதிந்த கவிதைகளும்
பெயர் தெரியாத புதிய பூவாக
உன்னையும் உனதந்த இயல்பையும்
சிலாகித்து கொள்ள!
© மதிஒளி சரவணன்