...

6 views

நீ!
எண்ணத்தில் ஏறிக்கொண்டு
உள்ளத்தில் வம்பிழுத்து
நித்திரையுடன் சண்டையிட்டு
உண்ணவிடாமல் மல்லுகட்டி
மற்றவைகளை மறக்கடித்து
சிரியென்று சேதுவாக்கி
அழுயென்று அறைவிட்டு
தவியென்று விட்டு சென்று
இப்போதும் நிழலாடும் பிம்பமாய்
நினைவினை மொத்தம் மொய்ந்து
இனிமையோடு துவர்க்கும்
கண்ணீர் துளிகள்...
நீ!❤️
- சீதளா செ🌺 @meowkutty
#nee #நீ #kadhal #kanavu #thollai #anbu #kavidhai #enavan #kadhaltholvi #kadhalkaviyam
© சீதளா செ