...

8 views

சோகங்கள்
நீர் அசைக்காததொன்றும் அசையாது
நீர் ஆட்டாததொன்றும் ஆட்டாது
நீர் நடாத ஒன்றும் வளராது
நீர் பிடுங்காத ஒன்றும் சாகாது
எத்தனை எத்தனை ஆசைகள் எந்தன் உள்ளில் இருக்குது
தீராத ஏக்கங்கள் எத்தனை எத்தனை உள்ளது
ஓயுமா என் தோல்விகள்
தோற்குமா என் பயங்கள்
சாகுமா என் சந்தேகங்கள்
விடியுமா புது விடியல்கள்
இறைவா
சோகங்கள் மறையட்டும்
பாரங்கள் குறையட்டும்
மன நோவுகள் ஆறட்டும்
இறைவா நீ வா
நிறைவாய் நீ வா
குறை யாவும் பறந்து போம் வா
சுகமாய் வாழ சுபமாய் வாழ
அருள் தர வேண்டும் இறைவா
நீர் என்ன செய்ய போகிறீர் என்று எனக்கு தெரியாது
அதையே நான் எப்படி கேட்பது
நல்லதொரு திட்டம் நடக்க போகுது
அதன் நிழலை என் மனதில் நான் உணருகிறேன்
கூடி வா
தோழா வா
மாறி வா
மனம் மாறி வா
ஆடி வா
தேடி வா
நாடி வா
குறை ஒன்றும் இல்லை நீர் இருக்கயிலே
நிறைவாய் எல்லாம் நடந்தேறுமே
மறை சொல்லும் வார்த்தை நான் செல்லுவேன்
இரு நன்மைகளை பெற்றிடுவேன்
வாழ்விலும் தாழ்விலும்
உயர்விலும் சரிவிலும்
உந்தன் கரமே என்னை தாங்குதே
உந்தன் வார்த்தை என்னை தேற்றுதே
வேகம் செல்லும் மேகம் போல எந்தன் பாரம் அகலுமே
இன்று அகலுமே
நன்மை செய்தீரே நன்றி இயேசுவே
உம்மை துதிக்கிறேன்
வாழ்நாளெல்லாமே நன்றி இயேசுவே
© gladis