...

4 views

உன் எண்ணங்கள் போதும் நான் வாழ

பேருந்தின் ஐன்னல் ஓரம்,
இனிய இசை செவி நனைக்க,அவன் கைக்கோர்த்து
என் கூந்தல் வருடிய இளங்காற்று.....
..... இன்று சன்னல் கண்ணாடிகள் வழி மறிக்க,
சிறு துளை தேடி கன்னம் வருட எண்ணுகிறது.
என் முகக்கவசம் எதிர் நிற்க, பொய் கோப குழந்தையாய் கவசம் தட்டுகிறது.
என்றும் காதல் மாறா துணைவன், தவழ்ந்து மகிழ வழியில்லை.,
என் கன்னங்கள் இன்று பூட்டப்பட்டு விட்டன.
நான் கவசம் நீக்க காத்துக்கொண்டே நிற்கிறான்.....
நீ என் கூந்தல் நுழைந்த கண்கள் வருடிய, கன்னம் உரசிய, உன் அன்பின் எண்ணங்களுடன் நானும் நிற்கிறேன்......


© manjupriya❣️