...

6 views

தாலாட்டு
மல்லிகை மலர் போல
தாமரை மலர் போல
உறங்கும் உன் முகம்
காண்கின்றேன்...(2)
(மல்லிகை)
சிறு இதழ் பிரித்து
அம்மா என்று
அழைப்பது எப்போது?
ஒன்று இரண்டு பல் முளைத்து அழகாய்
சிரிப்பது எப்போது?
(மல்லிகை)
சிறு சிறு பொம்மை வேண்டுமென்று அடம் பிடிப்பது எப்போது?
ஒன்றிரண்டு என பாதம் அடி எடுத்து வைப்பது எப்போது?
(மல்லிகை)