...

4 views

💞பாரதியின் காதலி 💞
பனி விழும் இரவு பௌர்ணமி நிலவு -அவள்
முந்தானையை திருட முயற்சி செய்யும் காற்று.....

காற்றினை
கண்டிக்கும் அவள்
கரங்கள்....

திமிரேறிய
தீ உமிழும்
காந்த
கரிய இரு விழிகள் ......

நடு இரவில்
நளினமாக நடக்கும்
தையல் அவளின்
தைரியம் .....

தைரியமிருந்தால் தீண்டிப்பார் என்று
சவால் விடும்
சுந்தரியின் செம்முகம் .....

அருகில் சென்று
அவளை
அணைத்திட
ஆசைதான்.....

வாயுதேவனையே
வருட விடாமல்
வஞ்சியவள்
வெஞ்சினம் கொள்கிறாள்

சாதாரண அரியான என்னை சத்தியமாக
பல்லை உடைத்துவிடுவாள் பாரதியின் காதலியான அவள் ......
© 💞ஐயை பாரதி 💞