...

7 views

இனி உன் கரம் பிடித்து நடக்க என் காதல் பயணம் தொடரட்டும் !
ஓரிரவில் ஓர் நிலவென உதித்தவளே என்
விழிகளை திருடி உன் இதயத்தில் ஒளித்துக்
கொண்டாய்

உன்னை நினைக்கின்ற ஒவ்வொரு கணமும்

திருடிய விழிகள் வேண்டாம் திருடின
இதயம் வேண்டும் என்றெண்ணுகிற போதும்
தீரவில்லையடி உந்தன் மீதான காதல்

முத்தத்தால் கோலம் போடும் உன் உதட்டினை காண ஈரேழு
ஜென்மம் தவம் இருந்து பிறந்தேன்

இனி உன் கரம் கோர்த்து நடக்க என் காதல் பயணம் தொடரட்டும் !
© Iy Thamizhanda