...

6 views

என் தனிமையில்
என் தனிமையில்
உம் துணையினில்
மகிழ்கிறேன்
உம் ஆவியில்
உம் ஆறுதலில்
வாழ்கிறேன்

என்னை நெருக்கி உருக்கி ஒடுக்கி அடைத்த கூட்டத்தை எல்லாம் நீர் அடைத்தீரே
என்னை உருக்கி வணைந்து
உருவம் கொடுத்து உம்முடன் என்னை நிற்க வைத்தீர்
நான் எழுதும் காவியம்
நீர் தந்த ஞானம்
உம் வழியில் பயன்படும்
உம் வழியில் வளர்ச்சி பெறும்
உம் மனதை திருப்தியாக்கும் நல்ல
வரம் ஒன்றை நீர் தந்தீர்
உம் தோழர் கூட்டம் பெருகியே உம் சிலுவையண்டை நின்றிடும்

எனக்கெதிராய் ஒரு கூட்டத்தை எழுப்பியே விடுகிறீர்
எனக்கெதிராய் ஒரு மனிதனை தூண்டியே விடுகிறீர்
தனிமையாய் போரிட என்னை கை விடுகிறீர்
விடுகிறீர் விடுகிறீர் கை விடுகிறீர்

நீரோ எல்லாம் என் நன்மைக்காக செய்கிறீர்
என் விரல்களை போருக்கு பயிற்றுவிக்கிறீர்
இது தெரியாமல்
உண்மை புரியாமல்
உம்மேல் பலமுறை கோபித்தேனே
மதியீனன் நான்
புத்தியீனன் நான்
உம் அடி வீழ்ந்து கெஞ்சினேனே

இதோ உமக்கே அடிமை என்று கூறினேன்
ஏதோ பித்தம் பிடித்தவனைப்போல் நிற்கிறேன்
என்னை பகைத்த கூட்டத்திற்கு முன்
என்மேல் உம் அன்பை காண்பித்தீர்
என்னை ஒடுக்கிய மனிதன் முன்பென்
தலையை உயர்த்தி நகைக்க வைத்தீர்
நகைக்க வைத்தீர் என்னை
நகைக்க வைத்தீர்
இயேசுவே என் இயேசுவே






© gladis