...

8 views

சலனம் என்னும் அவள்
சலனம் என்னும் அவள்...

உள்ளத்தில் கருக்கொண்ட
உணர்வுகளின் பெண்குழந்தை...

இரும்பு நெஞ்சை இடித்துடைத்த இதமான இளமடந்தை...

மயக்கும் தெவிட்டாத தேன்துளி அவள்...

மார்பில் சுமக்காத மான்விழி அவள்...

உள்ளம் பிரசவித்த உயிர்வளி அவள்...

உறக்கம் கொல்லும்‌ பனித்துளி அவள்...

விழியில் மலர்ந்திடும் விந்தை என் பிள்ளை - அவளை

விட்டுப் பிரிந்திடும் சிந்தையும் இல்லை...

அழகிய பிஞ்சுக் கால்களால் உதைத்து

ஆயிரமாயிரம் அதிர்வலை கொடுத்து

அடிநெஞ்சில் ஆனந்த வலிகளை அளித்து

அறிவென்னும் வீரனை அழகாக அழித்தவள்...

அன்பென்னும் ஆடையால் அலங்கரித்துக் கொண்டவள்...

ஆசையென்னும் மலர்க்கொத்தை
அணிந்து கொண்டு சிரித்தவள்...

சந்தனமாய் மணப்பவள் -என்

சலனம் என்னும் அழகுமகள்...

சமுதாயம் பூமகளைச் சாக்கடையாய்
மாற்றியதேன்?

உணர்வரசி அவளையும்தான்
ஊரெல்லாம் தூற்றியதேன்?

கல்லைக் கூடக் கரையவைக்கும்
காதல் மலர் அளித்ததாலா?

உலகத்தில் உயிர்ப்புதனை
உணரச் செய்து களித்ததாலா?
© த.கிருத்திகா