...

4 views

முத்தம்
" முத்தம் அது எவ்வளவு
அழகானது
பூமி அன்னை குளிர
அந்த மேகமகள்
கொடுத்தாள் மழை
முத்தம்!!
கவன் வீசும் காற்றும்
கறைந்து போக
காடுகள் கொடுதது
பசுமை முத்தம்!!
படர்ந்து விரிந்த
ஆழிக்கு அந்த
வானம் தந்த நீல
முத்தம்!!
மனமெங்கும் மண் வாசம் வீச மாறி கொடுத்தாள்
வானவில்
முத்தம்!!
இரவுக்கு அந்த அம்புலி
கொடுதது வெளிச்ச
முத்தம்!!
வெயிலுக்கு நிழல் கொடுதது கருமை
முத்தம்!!
காதலர்கள் கொடுத்தால் அது காம
முத்தம்!!
மூச்சடைத்து கொடுத்தால் அது மோக
முத்தம்!!
மழலைக்கு தந்தை கொடுத்தால் அது ஆசை
முத்தம்!!
தாய் கொடுத்தால் அது
அன்பு முத்தம்!!
வெள்ளை தாலுக்கு
எழுத்துக்கள் கொடுத்தால் அது
அஞ்சல் முத்தம்!!
பச்சை கிளிகள் கொடுத்தால் அது கொஞ்சல் முத்தம்!!
சத்தம் ஆயிரம் வந்தாலும் சிறு சத்தமின்றி வருவது தான் முத்தம்!!

( கவிஞர்) வேல்.