...

1 views

அம்மா என்றால் அன்பு💕
அவள் வீட்டில் இல்லை
நான் கண் விழித்தேன்
விழிப்பின் உணர்வில்
அவளையே தேடினேன்..

அடுப்பில் சூடாய் மணக்கும்
சாம்பார்
இன்னமும் வாசம் பரப்பும்
ஊதுபத்தியின் கருணை..

வாசலில் அமர்ந்தேன்
அவளையே யோசித்தபடி
ஈரத்துடன் காற்றையும்
அரவணைக்கும் அம்மாவின்
புடவை பேசியது
நீ சாப்பிட்டுவிடு நான்
உன் அடுத்த தேடலுக்குள்
வந்துவிடுவேனென..

© kamal