...

6 views

எனக்காக பிறந்தவளே...
என்னவளே..என்னவளே..
எனக்காக பிறந்தவளே..

எங்கிருந்து வருவாயோ..
பிறவி பலன் தருவாயோ..

கருத்தவளோ,சிவத்தவளோ
கலங்காமல் பார்த்திடுவேன்..
துயரேதும் வரவிடாமல் அணைத்து
நானும் காத்திடுவேன்

அடங்காத ஆள் நான்,உன்
அன்பினிலே அடங்கிடுவேன்..
கோபமென ஆனாலும்
உனக்காக பொருத்திடுவேன்..

அடுத்த ஊரில் இருப்பாலோ..
தூரசொந்தம் ஆவாளோ..
நான் ரசித்து கடந்த பெண்ணில்
ஒருத்தி வந்து நிற்பாளோ..

என்னை ஆளப்பிறந்தவளே,
எந்த வழியில் வருவாளோ..

என் அறையின் மெத்தை கூட
என்னை கண்டு வெறுக்கிறதே..
ஜோடி போட்டு வரச்சொல்லி
அதுவும் கிண்டல் செய்கிறதே..

கருவின் முகம் அறியாது கொள்ளும்
தாயின் பாசமே..
அதுபோல் தான் நீயெனக்கு..உனக்கு
எந்தன் நேசமே..

உயிராய் உனை பார்த்திடுவேன்,
உடன் என்னை சேர்ந்திடுவாய்..
உயிர்காதல் என்னவென்று என்
வழி நீ உணர்ந்திடுவாய்..

© பினோய் பிரசாத்