...

4 views

இந்த வாழ்க்கை
வாழ்வை வாழ முயற்சி செய்வதென்பது
அதன் அர்த்தங்களை
உணர்ந்ததால் நடக்கும் நிகழ்வு..

இந்த வாழ்க்கை சில அர்த்தங்களை
புதைத்து வைத்துள்ளது
நமக்கு புதிராக..

புதிரை யார் கண்டறிவது
புரிந்திட்ட அனுபவங்களை கேள்
அவை விடை சொல்லும்
வெகுண்ட உணர்ச்சிகளால்..

புதிர் சில கட்டங்களை கடக்கும்போது
ஆர்வத்தை குறைக்கும்
காரணம்
புதிரை கண்டு வியந்த
அஞ்சிய
அடிமை செய்த
மகிழ்வித்த
அத்தனை பொய்யான
உணர்வுகளும்
பழகி விடும்..

மாயை என்ற மைதானத்தில்
யாரும் வென்றவரில்லை
மாயம் தான் அனைத்தும்..

புதிராக நீ இல்லை
புதிதாக இரு
புத்துயிர் தர
புறப்படு
புல் கூட பனிக்கு சொந்தமில்லை

உரிமை கொண்டாட
உன் உள்ளத்து செயல்கள் மட்டுமே
உன் சொந்தம்

வாழ்வை ஜெயிக்க வேண்டுமெனில்
ஜகத்தின் போக்கில் நடித்து
அகத்தின் பாதையில் வாழ்

அதற்கு முன்னமே
ஆன்மாவை உணர்ந்திடு

இங்கே புதிர் இல்லை
விடை உண்டு

சிந்தயை சீண்டிப்பார்
சீரானவைகளை தேடிப்பார்
சிரித்திடும் முகமெல்லாம்
அழுதிடும் அகமெல்லாம்
மாயையே..

மாறிடும் வேள்வியில்
மனம் எதை உறவு கொண்டாடுகிறதோ
அதனையே உருவாக்கத்தின் தீயாக்கும்

தீ சுட்டப்பின் உடலை நொந்து பயனில்லை
வெறுத்தப்பின் வாழ்வை சொல்லி
பலனில்லை

உறுதி கொள்
இந்த வாழ்வு
அர்த்தம் கேட்கிறது
சரியாக அதனை
தேடு..
@கவிதை காதலி


© kamal
#life
#tamil
#Heart