![...](https://api.writco.in/assets/images/post/default/story-poem/normal/Photography B.webp)
7 views
_விழு அழாதே எழு_
தோல்வி கண்ட இடத்திலே
வெற்றி என்பது இல்லையோ
மனமுடைந்து பிதற்றுவது
வெற்றிக்கான வழியோ
வடிக்கும் கண்ணீரால்
பதிலளிக்க முடிந்திருந்தால்
உலகிலுள்ள உயிர்களுக்கு
ஏதுண்டு தோல்வி
தோல்வியை உனது வாழ்வின்
வெற்றியின் பாதையாய் மாற்றி
மீண்டெழுந்து முயலு
வெற்றி உந்தன் கையில்
வீணான வேதனையும்
பயனற்ற பேச்சுகளும்
வாழ்வின் அடித்தளம் அல்ல
புரிந்துகொள்வாய் நீயும்
நித்தமும் முயன்று
வியர்வை சிந்த உழைத்து
வெற்றியெனும் கனியதனைப்
பெற்றிடுவாய் நீயும்
© Rohini Rajamani
Related Stories
5 Likes
0
Comments
5 Likes
0
Comments