...

6 views

பயணம்
வறண்ட நதிகள்
நீர் நிரம்பி பயணிக்கின்றன
நீர் தேக்கங்கள் கொள்ளளவு
மீறி வெளியேறி பயணிக்கின்றன
வெள்ளம் பாதைகளில் பாய்ந்து
வேகமாய் பயணிக்கின்றன
அவசரமாக ஊருக்கு
புறப்பட்டு பயணிக்கிறேன்
நான்
கொட்டும் மழையில் நனைந்து
அழைத்த எந்த ஆட்டோக்காரனும் வெள்ளம்
காரணம் சொல்லி
வர மறுக்குறான்
சரி, மழை நின்ற பின்தான்
பயணம் தொடர வேண்டும் போல...

ந க துறைவன்.