...

4 views

நாங்கள் எல்லாம் இப்படித்தான்🖤
வார்த்தை விளையாட்டுகளில் யாரையும் வஞ்சித்ததில்லை,பெரிய புரட்டுகளை புரட்டி தள்ளி யாரையும் ஏய்த்ததில்லை,சிரிப்பிற்கு காரணம் வகுக்க சிறிதுகூட முயன்றதில்லை,எங்கே இன்பமென எப்போதும் தேடி அலைந்ததில்லை,வெற்று வெற்றிகளை வென்றெடுப்பதிலும் விருப்பமில்லை,புகழுரைகளை புனைந்து கூறி போட்டியிடுவதில் அர்த்தமில்லை,தண்ணீர் சோறு என வறுமைப்பாட்டும் பாடியதில்லை,ஆடை அலங்காரங்கள் கொண்டு யாரையும் ஆய்ந்ததில்லை,அழகின் அழகற்ற வரையறைகளை கிஞ்சிற்றும் கொண்டதில்லை,எந்த ஏக்கங்களையும் ஏறெடுத்து நோக்கியதில்லை,காரணங்களை சொல்லிவிட்டு காரியங்கள் செய்வதில்லை,அன்பென்று ஆனபின்பு எதிர்ப்பார்ப்பு ஏதுமில்லை,இழந்துவிட்ட எதுவிற்கும் எப்போதும் அழுததில்லை,இவையெல்லாம் எனக்கானதென பிரிவினைகள் பேணவில்லை,எவரும் படித்துப்போக எதுவெதுவோ எழுதவில்லை,நினைத்ததை நினைத்தபடி நின்றபடி நிகழ்த்தவில்லை,நடப்பதெல்லாம் நன்மைக்கென விதி வீணை வாசிக்கவில்லை,நடந்ததெல்லாம் நினைவுகளாக்கி இருப்பவரை கொன்றதில்லை,எதுவும் விளங்காமல் ஏறுமாறாக பேசியதில்லை,காலத்தை வசமாக்கிவிடும் கனவுகளை காணவில்லை,எதுவும் புரியாமல் யாரையும் எதிர்க்கவில்லை,பாசமென பந்தமென பங்குபோட்டு பழக்கமில்லை,யூகமென்று ஏதோ சொல்லும் யுத்தியை கையாளவில்லை,அறிந்துகொண்ட மனிதர்களை அறிவுரைகூறி அறுத்ததில்லை,புத்தகங்களில் புதைந்துவிடும் புனிதமும் புதிது இல்லை,இதுதான் நானென என்னைப்பற்றிச் சொன்னதில்லை,விதிகளின் வழி வாழ்க்கையென வெறுத்தும் வழக்கமில்லை,எனக்கு வேண்டுமென எதையெதையோ வேண்டியதில்லை,விருப்பமற்று தரும் பொருளை இளித்து வாங்கும் இழிவுமில்லை,ஏமாற்றும் எதிரிகளை ஏய்த்து பேசி இயங்கவில்லை,வாழ்வு இதுதானென வரையறை வகுத்ததில்லை,முயற்சியற்று முகம்காட்டி முந்திக்கொள்ள முயலவில்லை,தோற்றுத் தோற்று போனபின்பும் துவண்டுபோய் விழுந்ததில்லை,வெற்றியென்றும் தோல்வியென்றும் வேறுபாடு வகுத்ததில்லை,இப்படியெல்லாம் எனைப் வாழச்செய்யும் கல்வியை ஏதேனும் ஒருவகையில் கற்றேனாயின் அதற்கு நான் அடிமையாவதில் தயக்கமில்லை. நாங்கள் எல்லாம் இப்படித்தான் திறந்து மூடும் திருட்டு இல்லை,இப்படியே இருக்கட்டும் எங்களது வாழ்க்கையெல்லாம் ,சராசரிக்கே சண்டையிழுக்கும் சிலருக்கு இது புரியாது,இப்படியா இப்படியா 😯ஆம் அப்படியே தான் போதும் போய்விடுங்கள்,இது எங்கள் வாழ்க்கை தானே , பாசத்தின் பேர்சொல்லி பாதுகாப்பு காரணம் காட்டி பதறிப்பதறி போகிறீர்கள்
என்னதான் சொல்லுவது?என்னிடத்தில் ஏதுமில்லை....
# "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனை பேய்களென்பார் இந்த மரத்திலென்பார் அந்த குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டிலென்பார் மிகத்துயர்ப்படுவார் எண்ணி பயப்படுவார்"#
_ பாரதியார்😎