...

9 views

இயற்கை
மங்கிய மேகக்கூட்டத்தில்
மங்கள வாத்தியம் முழங்க
மண் ஈர்க்கும் மழைத்துளிகள்
மனதை குளிரச்செய்தன..

ஏர்பூட்டிய தரிசு நிலத்தின்
எப்படியான பூப்பெய்தல்
நிகந்தாகினும்
நெல்நாற்றினை உள்விழுங்க
வேண்டும்..

பரிச்சயமில்லா செம்மண்ணில்
பரிசுத்தமான மலரிதழ்கள்
பச்சைபிள்ளை போலே
சிரிப்பை தர
இனியெங்கே ஆறுதல் தேடுவது..

வரப்பெல்லாம் காய்ந்திட்டாலும்
வம்பு செய்த குரங்கினங்கள்
வால் கொஞ்சமாய் குருவிகள்
பாட்டிசைகளாய் அடர்ந்த காடு..

பாட்டன் சொருகிய வேஷ்டியும்
பசு கரந்தப் பாலிலும் கண்ட
வெண்மை இனியெங்கே காண்பது..

மாண்டு போன இயற்கையில்
மரணிக்கும் மானிட வாழ்வில்
முழுபாதி நரகமும்
முன்னதான இறப்பும்
நாகரீக விருந்தோம்பலின்
நளின அடையாளம்..

@kamala.kamal
#nature
#tamil
#mood
© kamal

Related Stories