தாம் + பத்தியம்…
‘தாம்பத்தியம்
அறிவிலிக்கு ஆனதோ
தாம் பத்தியம் என்றே?
பக்திக்குப் பாலூட்டும்
முக்தி வான்களே
சக்திக்கு அப்பால்
சாகுதே உன் உறவு
சலனமில்லாமல்
போகுதே உன் உணர்வு
சாக்கடை கழிவில்
பூக்கடை பூக்கள்
நாட்கணக்கில்
நசுங்குவதும்
நியாயம் தானோ?
பணமீட்டும்
பிணமாகத்
தினம் தினம் நீ ஓட
கணம் பொழுதேனும்
காமத்தின்
கருவறையைக்
கவனத்தில் தேடு,
கன்னியின்
மனநிலையில்
எண்ணித்தான் பாரும்
எண்ணெய்யில்
விளக்காகத்
திண்ணையில்
அவள் மோகம்
பண்ணையில்
பாய்விரித்துப்
படுக்கிறாயே
பரமாத்துமாவாக,
பின்னிய
கால்விரல்களில்
தீராத தாகம்
தீர்த்துவிட வேண்டாமா?
கண்ணவனின் பாகம்,
குதிரைக்குக் கண்கட்டிய
குருட சவாரி காரனோ?
வழித்தவரும்
பாதைக்குப்
போதைப்பொருள்
மூலமும் யாமே,
கட்டியவள்
கையருகில்...
களவாணி
கள்ளக்காதல்
கைப்பேசியில்
ஒட்டியவள்
ஓடுகாலியுமல்ல
திட்டியவரெல்லாம்
திறமைசாலியுமல்ல,
கெட்டியான பிடியில்
கொட்டிய தாம்பத்தியம்
சுட்டியாகச் சுடர்விட்டு
குட்டியாகக் குழந்தை வரம்’.
#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes
© aV ✍🏾
அறிவிலிக்கு ஆனதோ
தாம் பத்தியம் என்றே?
பக்திக்குப் பாலூட்டும்
முக்தி வான்களே
சக்திக்கு அப்பால்
சாகுதே உன் உறவு
சலனமில்லாமல்
போகுதே உன் உணர்வு
சாக்கடை கழிவில்
பூக்கடை பூக்கள்
நாட்கணக்கில்
நசுங்குவதும்
நியாயம் தானோ?
பணமீட்டும்
பிணமாகத்
தினம் தினம் நீ ஓட
கணம் பொழுதேனும்
காமத்தின்
கருவறையைக்
கவனத்தில் தேடு,
கன்னியின்
மனநிலையில்
எண்ணித்தான் பாரும்
எண்ணெய்யில்
விளக்காகத்
திண்ணையில்
அவள் மோகம்
பண்ணையில்
பாய்விரித்துப்
படுக்கிறாயே
பரமாத்துமாவாக,
பின்னிய
கால்விரல்களில்
தீராத தாகம்
தீர்த்துவிட வேண்டாமா?
கண்ணவனின் பாகம்,
குதிரைக்குக் கண்கட்டிய
குருட சவாரி காரனோ?
வழித்தவரும்
பாதைக்குப்
போதைப்பொருள்
மூலமும் யாமே,
கட்டியவள்
கையருகில்...
களவாணி
கள்ளக்காதல்
கைப்பேசியில்
ஒட்டியவள்
ஓடுகாலியுமல்ல
திட்டியவரெல்லாம்
திறமைசாலியுமல்ல,
கெட்டியான பிடியில்
கொட்டிய தாம்பத்தியம்
சுட்டியாகச் சுடர்விட்டு
குட்டியாகக் குழந்தை வரம்’.
#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes
© aV ✍🏾