...

7 views

என் அழகனே!
நீ சொன்ன ஒற்றை வார்த்தை என் உயிரில் இனித்திடுதே!

உந்தன் கோபப் பேச்சுகள்
உரிமையுடன் என்னை வலம்வர...
உலகம் மறக்கிறேன்...

உள்ளமற்றவர்கள் பேச்சுக்களையெல்லாம்
மனம் ஏற்கமறுத்து
உண்மை தெளிகிறேன்
நிந்தன் கண்களில்...

உனை பிடித்ததற்க்கான காரணம்
தெரியவில்லை எனக்கும் இன்று வரையில்...

இறுதி வரையில் கரம்பிடித்திட
ஆசைகொள்கிறதே என் மனம்....

உன்னில் உணரும் தாய்மையில்
சிலிர்க்கிறேன்...

உந்தன் கள்ளமற்ற கண்களை தவிர்த்து வேறேதுவும் வேண்டுமா இவ்வுலகிலே...

எத்துணை பேர் என்ன உரைத்தாலும்...
தெய்வமே சொன்னாலும்
நின்னை... நின் கண்களை... மட்டுமே நிறைவாக நம்பும்
என் மனம்...

மலையளவு நம்பிக்கை வைத்துவிட்டேன்
நின் மேல்... எள்ளளவு குறைந்தாலும்
என் மூச்சை நிறுத்திடுவேன்...
என் அழகனே!

© Nandinipriya Maheswaran