...

9 views

காத்திருப்பின் வரி
எழுத நினைத்த வரிகள் எல்லாம்
என் பேனா மையின்
ஈரத்தில் உறைந்து
ஊசலாடுகிறது.....

சில வலிகள் நிறைந்த
வரிகள் எல்லாம்
என் கண்ணீர் துளிகள்
விழுந்து அழியா
ரணமாய் உறைந்து
இருக்கிறது என் ஹிருதயத்துள்.

என் எல்லாமாய் இருந்த நீ
இன்று யாரோவாய்
இருக்கிறாய்
காத்திருப்பேன்
நீட்சியின்
மறு சாயலாய்.

உன் சாயலின் பிம்பம்
நிழலாடுகிறது நம் காதலின்
நிஜத்தில்.....

நிஜத்தில் கூட நான்
இல்லையே
உன் வாழ்வின் எச்சத்தில்....

என் மிச்சத்திலும் வடுவாய் வதைகிறாய்
காதலில் போதமின்றி....


#கார்குழலி_வரிகள்