...

5 views

காதல்
இதயம் தேடும்
நேசமும் நீயே!

இசையாய் என்னுள்
வருவாயெனில்.?
இரவென்ன
பகலென்ன
காத்திருப்பேன்!

விழிகள் தேடும்
வார்த்தையும் நீயே!

உயிராய் என்னுள்
ஜனிப்பாயெனில்.?
வலியென்ன
வதையென்ன
பொறுத்திருப்பேன்!

நீ எனும் ஒற்றை
எழுத்துதான்..
என் உயிரைத் தாங்கி
நிற்கும் "உயிர்மெய் எழுத்து"!?
© Tamil