...

4 views

மாயக்காரா!
உந்தன் திருமணம் பற்றிய
பேச்சுக்களெல்லாம்
ஊசி கொண்டு கிழிக்கிறது
என் நெஞ்சத்தை...

ஆயுள் முழுதும்
உன் முகம் பார்த்தே
வாழ்ந்திடும் ஆசை
எப்பொழுது தோன்றியதோ...

நிறைவேறா ஆசையென்று
தெரிந்தும்...
உனை நினைத்தே ஏங்கும்
என் நெஞ்சத்தை
என்ன செய்வதடா..
மாயக்காரா!

© Nandinipriya Maheswaran