...

5 views

எழுதியவனுக்கு எல்லாமே அழகு
உலர்ந்த இலை அழகு

உயிர் சுமக்கும் உதரம் அழகு

கரு விழியில் கண்ணீர் அழகு

கார்கால நிலவும் அழகு

கானல் போல சோகம் அழகு

காலத்தின் கடிகாரம் கனவால் அழகு

பாவையின் நெற்றி முத்தம் அழகு

படிக்காத வரிகளும் அழகாக தெரிகின்றன

எழுதியவனுக்கு எல்லாமே அழகு தான்

அவன் எழுதாத வரை கற்பனை

எழுதியபின் அதுவே காலத்தின் கலை
© kamal