...

6 views

ஊர் குருவியின் வினா!!!
யாரும் இல்லா சாலையிலே
ஊர் அடங்கு வேளையிலே
ஓர் ஊர் குருவி வந்ததம்மா!..
சலனம் இல்லா நிலைகண்டு
சஞ்சலம் கொண்டே
பாட்டொன்று பாடுதம்மா!!

மானுடமே நீ எங்கே??
மறைந்திருந்து எம்மை தாக்கபோகிறாயா?
இல்லை
மண் வளம் கெடுத்து மாண்டு தான் போனாயா?
நீர் வளம் உறிஞ்சி நீர்த்துதான் போனாயா ?
காற்றை கறைபடுத்தி கரைந்து தான் போனாயா??
கயவர்களே
நின் விதைத்த வினையிலே
எஞ்சியது நான் அன்றோ!?!?!