அவள் மீதான காதல்
அவன் அவள் மீது கொண்ட
காதல் இன்றோ நேற்றோ
வந்தது அல்ல..
விவரம் தெரிந்து எப்பொழுது
அவளை முதன்முறை பார்த்தானோ
அப்பொழுதே தொடங்கியது..
அவள் வருகின்ற
பொழுதெல்லாம்
வீட்டிற்குள் இருந்தபடி
ரசித்திருப்பான்..
எப்படியாவது அவளை
ஒருமுறை கட்டித்தழுவிட
வேண்டுமென்று
நினைத்திருப்பான்..
ஒவ்வொரு முயற்சியும்
அவன் அம்மாவிடம்
அகப்பட தோற்றுப்போய்விடும்..
இறுதியாய் அன்று அவன்
அம்மா வீட்டில் இல்லாத
பொழுதில் அவனுக்காய்
அவள் வந்தாள் வீதியில்..
நொடிபொழுது தாமதிக்காமல்
பாய்ந்து வந்தான் வீதிக்கு..
கட்டித்தழுவி
ஆனந்த கூச்சலிட்டான்..
அவளுடன்..அந்த மழையுடன்..
© பினோய் பிரசாத்
காதல் இன்றோ நேற்றோ
வந்தது அல்ல..
விவரம் தெரிந்து எப்பொழுது
அவளை முதன்முறை பார்த்தானோ
அப்பொழுதே தொடங்கியது..
அவள் வருகின்ற
பொழுதெல்லாம்
வீட்டிற்குள் இருந்தபடி
ரசித்திருப்பான்..
எப்படியாவது அவளை
ஒருமுறை கட்டித்தழுவிட
வேண்டுமென்று
நினைத்திருப்பான்..
ஒவ்வொரு முயற்சியும்
அவன் அம்மாவிடம்
அகப்பட தோற்றுப்போய்விடும்..
இறுதியாய் அன்று அவன்
அம்மா வீட்டில் இல்லாத
பொழுதில் அவனுக்காய்
அவள் வந்தாள் வீதியில்..
நொடிபொழுது தாமதிக்காமல்
பாய்ந்து வந்தான் வீதிக்கு..
கட்டித்தழுவி
ஆனந்த கூச்சலிட்டான்..
அவளுடன்..அந்த மழையுடன்..
© பினோய் பிரசாத்