...

17 views

ச்சீ சீ கெட்ட கவிதை…
உடை உடுத்தி

படை எடுத்தது நடுச் சாமம்


சதை உரிக்க

சாகசம் நடக்குமோ?

வதை பெருக்க

இன்பமும் கொடுக்குமோ?


விடைகொடுக்கவே

விதி படைத்தவன்

கொடி இடையிலே கஞ்சன்


மடைதிறக்கவே

மாது கொடுத்தவன்

மார்பு குழியிலே வஞ்சகன்


புடை சூழவே

புரட்டிப் போடுதே

புலன்களின் புராணக்கதை


தடை இல்லையோ?

தாகம் தீராதோ?

தசைகளின் தர்க்க போரில்


முத்தமான யுத்தத்தின்

சத்தமான சமிக்ட்சயால்

சூடானதே சுத்தமான இரத்தம்


விடைபெற்ற

தொடை இடையில்

விடுதலை பெற்றது காமம்

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes


© aV ​✍🏾