![...](https://api.writco.in/assets/images/post/default/story-poem/normal/13.webp)
6 views
கண்ணீர் என்னும் அவள்
கண்ணீர் என்னும் அவள்...
நொருங்கியே உள்ளம்
சிதைந்திடும் பொழுதினில்
நோக்காடு வந்தாற்போல்
நொடியெல்லாம் துடிக்கையில்
இமைக்குள் கடும்துயர்
இம்சிக்கும் போதிலும்
கண்களை அன்போடு
கட்டியணைக்கும் காதலி அவள்...
ஏமாற்றம் என்னும் அவள்
எட்டி உதைத்த போதிலும்
ஏக்கப் பேயவள்
ஏறி மிதித்த போதிலும்
தீயெனத் துன்பம்
தேகம் எரித்த போதிலும்
தாயெனத் தாங்கி
தாலாட்டுப் பாடுபவள்...
உண்மையை கொன்ற
உறவுகள் நித்தமும்
உதறித் தள்ளி
உமிழ்ந்திடும் போதிலும்
உறக்கம் தொலைத்து
உள்ளம் இரவில்
உடைந்து அழுதே
உளறிடும் போதிலும்
உனக்காக நான் என்று
ஓடோடி வருபவள்...
© த.கிருத்திகா
நொருங்கியே உள்ளம்
சிதைந்திடும் பொழுதினில்
நோக்காடு வந்தாற்போல்
நொடியெல்லாம் துடிக்கையில்
இமைக்குள் கடும்துயர்
இம்சிக்கும் போதிலும்
கண்களை அன்போடு
கட்டியணைக்கும் காதலி அவள்...
ஏமாற்றம் என்னும் அவள்
எட்டி உதைத்த போதிலும்
ஏக்கப் பேயவள்
ஏறி மிதித்த போதிலும்
தீயெனத் துன்பம்
தேகம் எரித்த போதிலும்
தாயெனத் தாங்கி
தாலாட்டுப் பாடுபவள்...
உண்மையை கொன்ற
உறவுகள் நித்தமும்
உதறித் தள்ளி
உமிழ்ந்திடும் போதிலும்
உறக்கம் தொலைத்து
உள்ளம் இரவில்
உடைந்து அழுதே
உளறிடும் போதிலும்
உனக்காக நான் என்று
ஓடோடி வருபவள்...
© த.கிருத்திகா
Related Stories
6 Likes
5
Comments
6 Likes
5
Comments