...

8 views

உலக மக்கள் யாவருக்கும் ஒரே முகவரி
முகவரியைக் கேட்பவரே
முதல் வரியைச் சொல்லவா
அந்த ஒரு முகவரிதான்
யாவரும் தெரிந்ததல்லவா

முதல் புள்ளி முகவரிக்கு
கருவூர் வரை நடந்து வந்தேன்
களைப்பாற இங்கேயே
கால் வலிக்கத் தங்கிவிட்டேன்

வந்த இடம் புவிவூராம்
அறிந்ததுமே அழுதுவிட்டேன்
உடலூர் வரை உணர்ந்து கொண்டு
உறவூர்வரை கடந்து விட்டேன்

பாதியிலே முகவரியை
பருவத்திலே மறந்து விட்டேன்
பக்குவத்தைத் தாண்டியதும்
பக்தியிலே மூழ்கிவிட்டேன்

சக்திபெற்ற சாகசத்தில்
காசு பணம் சேர்த்து விட்டேன்
சேர்த்த பணம் சேர்த்திடுமோ
சரியான முகவரிக்கு

நேர்த்தியாக அதைக் கொடுத்தேன்
நாட்டு நலன் முதல் வரிக்கு
வரி மேலே வரிவிலக்கும்
வரிக்குதிரை நம் கணக்கு

தேடி அலையும் முகவரிக்கு
தேவன் துணை நாடிவிட்டேன்
சேவகனாய் சின்ன சின்ன
நற்பலனைத் தேடிவிட்டேன்

கோடி பல குவித்துவிட்டேன்
கோபுரமாய் இருந்துவிட்டேன்
எட்டி நிற்கும் என்வயதில்
முகவரியை அறிந்து விட்டேன்

மேலூர் வரும் முகவரிக்கு
கீழூரில் சோதனைகள்
சரியான நற் பாதை வழி
சேர்த்திடுமே இறை போதனைகள்

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes

© aV ​✍🏾