...

6 views

என் போல் நீயும்..
என்னை சார்ந்த சரீரம் எனதல்ல..

என்னை சாராத ஆன்மா எனதே..

சரீர இச்சைகள் பாவத்தின் சேகரிப்பு

ஆன்மாவின் இச்சைகள் புண்ணியத்தின் விதைகள்

குருதிவழி இணைந்து பாயும்
அன்றாட எண்ணங்களில் கலந்தோடும் மாசுக்களாய் இந்த
மானிட வாழ்வு

குருட்டு நம்பிக்கையில் சென்ற இளமை

குறை கூறியே செல்கின்ற நிகழ்காலம்

வரப்போவது அச்சமென அஞ்சும் முதுமை

நிதர்சனத்தை உணர சற்று சிந்தனை செய் மனமே

இந்த வாழ்வில்
மானிடர்கள் யாவரும் ஒன்றே
சரீரமாக அல்ல

ஆன்மாவின் சாராம்சத்தில் ஒன்றுப்படுவதே ஆன்மீகம்..
© kamal

#lifestyle #thoughts #words @kamala.kamal