...

5 views

பூக்கள் பூக்க மறக்கிறது!
பெண் குழந்தை
பிறந்து இருக்கு லட்சுமி
வீட்டுக்கு வந்து இருக்கா என்று
ஊர் முழுக்க அப்பா சொல்ல...
அளவுகடந்த அப்பாவின்
புன்னகை கண்டு ....
பூக்கள் பூக்க மறக்கிறது!

பருவம் வந்தால் என்ன
எம்பொண்ணு கலகலனு
சத்தமாத சிரிப்பா என்று
அம்மா மற்றவரிடம்
சண்டையிட.... அம்மாவின்
அன்பு புன்னகை கண்டு....
பூக்கள் பூக்க மறக்கிறது!

பெண்ணா இருந்தா என்ன
பட்டணம் சென்று
படித்தால் என்ன என்று
அண்ணவன் உறவனரிடத்தில்
சண்டையிட.....
அண்ணவன் ஆணாதிக்கத்தை
சிதைத்து புன்னகை செய்கையில்...
பூக்கள் பூக்க மறக்கிறது!

வாழ்வின் இன்னொரு
அண்ணவனாக கிடைத்த
தோழனோடு தவறாக
அவளை பேசுகையில்...
ஊர் என்ன சொன்னால்
என்ன நீ என்னவள் என்று...
கணவன் கண்இமைத்து
புன்னகை செய்ய...
பூக்கள் பூக்க மறக்கிறது!

காதல் துளிர்த்து
கல்யாணம் முடிந்தும் ...
அவள் விருப்பமின்றி தொடாமல்
அவளை இரசிக்கும்
அவன் விழிகளின் புன்னகை கண்டு...
பூக்கள் பூக்க மறக்கிறது !


காமம் கொள்ளும் தருணம் இன்றி
எல்லா தருணங்களிலும்
விடியல் வந்ததை
அறியாமல் அவள் உறங்குகையில்
அவளின் உள்ளங்கை பிடித்து
என் தேவதைக்கு நான்போட்ட
தேநீர் என்று அழைக்க ...
ஆண் என்ற ஆணவம் சிதைந்து
புன்னகை ஆக
பூக்கும் தருணம்....
பூக்கள் பூக்க மறக்கிறது!

#தமிழ்கவி#வரிகள்


© Nuradhaag