...

5 views

பிரிவின் கனம்...
#Humiliation
© alone
வாழ்க்கை அர்த்தமற்று
போகிற போது,
அங்கே சோகம்
நம்மை குத்தகைக்கு
எடுத்துக் கொள்கிறது..

வாழ்வின் கனம்
தாங்காமல்
இருதயம் நொறுங்கும்
போது,
பாரத்தை இறக்கி வைக்க
வேறொரு இதயத்தை
நாடுகிறது..
காதல் என்ற பெயரில்
உன்னைத் தேடிய
நெஞ்சத்தில் உன் "பிரிவு"
என்றொரு இன்னொரு
பாரமும் சேரும் போது,
நெஞ்சம் தாங்காமல்
கவிதையில் வாழ்க்கை
கழிகிறது..

ஆம்,,
உன் பிரிவு
என் இயக்கத்தை,
இயங்காமல் செய்து விடுகிறது,
காயத்ரி...💘💘💘