...

4 views

என் பாரதியே🖤
பாரதியே
வா வந்து என்னைப் பற்று
விட்டுவிட்டுப் போனாயேடி என வீம்பு கொண்டு விலக்காதே!
பயணிக்க வேண்டும்
உன்னோடு பலகாலம்
இடிந்து போய் எழமுடியாமல்
தவிக்கிறேன்
வந்து வளைக்கரம் பற்று
வம்பு பேசாதே
புத்தகத்தை திறக்கிறேன்
எப்போதும் போல புன்னகை கூட்டு
எங்கே சிரி
ஆம் அப்படித்தான்
அழகனடா நீ!
கருத்துக்களால் கவர்ந்தவன் நீ
உன்னில் என்னை தொலைத்தவள் நான்!
என்ன பார்க்கிறாய்
மாற்றவில்லை அதே பொட்டு தான்
சக்தி இழந்து வந்திருக்கிறேன்
எனக்காக ஒரு கானம் இசை
ஆம் அதே தான்
"எங்கு காணினும் சக்தியடா"
மன்னித்து விட்டாயே!
பெரிய மனதுக்காரன் நீ
உன்னவள் தானே நான்?
நம்புகிறேன் நீ வசனக்கர்த்தா இல்லை!!!
இரவெல்லாம் விழித்திருப்போம்
எப்போதும் போல !
வீணாகக் கழிக்க வேண்டாம்
வீணைப்பாட்டு பாடு(நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?)............