...

4 views

உன்னை பிரிந்து விடமாட்டேன்
விண்ணிலே அவதரித்து
மண்ணுலகில் பெண்மையாய்
என் எதிரில் வந்தவளே,

மனமெங்கும்
பரவினாய் நீயாக
நான் காதல் கொண்டு வாடினேன் நோயாக,

உன்னை நினைத்து நினைத்து
இப்போது தான் காலம் கனிந்து
வான்மதியே உன் தரிசனத்திற்கு,

என் நெடுங்கால
காதலை ஏற்று இதயத்திற்குள்
நிபந்தனை இன்றி குடியமர்ந்தாய்,

என் ஏக்கம் தீர்க்க
நல்ல நாள் இதுவென்று
மனதில் கருணை கொண்டாய்,

இதயத்திற்குள்
அழைப்பு விடுத்து என்னை
உன்னுள் பகிர்ந்துக்கொண்டாய்,

உணர்ச்சிக்குள்
சிக்காமல் உணர்வுகளோடு
கட்சிதமாய் நின்று கொண்டாய்,

பிறரின் துன்பத்தை துடைப்பதில்
வல்லவளோ நீ
என் காதலையும் ஏற்றுக்கொள்ளும்
நல்லவளோ நீ,

அடியே சகியே
நான் ஆசைக்கொண்டேன் உன் மேலே
நீ் பாசமழை பொழிந்தாய் என் மேலே
என் காதலை நம் காதல் என்றாக்கினாய் இந்நாளிலே,

உந்தன் இதயத்திற்குள் அமர்ந்த
நான் உந்தன் கண்களை ஒருபோதும் ஈரமாக்க மாட்டேன்
எந்தன் வாழ்க்கையில் துணையாக வந்த உன்னை
பிரிந்து விடமாட்டேன் காலன் அழைக்கும் வரை.
- சங்கத்தமிழன்