...

9 views

பசிக்கான பண்டமல்ல பெண்ணின் அங்கம்…
"ஆணின் பசிக்கான பண்டமல்ல
தங்கமான பெண்ணின் அங்கம்„
புசித்துப் பார்க்க விரும்பும்
புண்ணிய வான்களே…
புணர்வில் புத்துயிர் பெரும்
புரையோர்களே…
அரித்த அரிப்பில் ஆண்குறி
நீட்டும் அயோக்கியர்களே…
ஆண்தான் என்று ஆணவத்தில்
திரியும் அரக்கர்களே…
பெண்ணின் பெருத்த இடையில்
பேராசை கொள்ளும் பேய்களே…
நங்கையின் நடை சபலத்தில்
நாக்கை தொங்கவிடும் நாய்களே…
பருவ பெண்ணின் பருத்த
முலையைப் பருக துடிக்கும்
பாருலக பன்றிகளே…
அன்னை அன்பை அள்ளித்தந்த
அமிர்த சுரப்பியை மறந்த
மங்குனி மடையர்களே..
கன்னிப் பெண்ணின் கால் நடுவில்
காமத்தைத் தேடும் கயவர்களே…
துன்பமான அவளின் தூமை
தினத்தை
துறவு கொள்ளாத இச்சையான
எச்ச பிறவிகளே…
புஜத்தில் திமிர் கொள்ளும்
மகான்களே…
நினைத்து பாரும் நிஜத்தில்
சதை தின்னும் சபலமாக
மட்டும் பெண்ணல்ல…
அந்தரங்கத்தில் அங்கத்தின்
உள்ளே அவளின் ஆன்மா
அலறிக்கொண்டிருக்கிறது
அவர்களின் வலிகளை
அறியாவிட்டாலும் பரவாயில்லை
மாறாக வதைகளைத் தராதீர்…

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes

© aV ​✍🏾