...

1 views

கனவு

நிஜத்தில் ரசிக்க முடியாத
நிகழ்வுகளை அனுபவிக்க
வாய்ப்பளிக்க முடிவு செய்த
இறைவனால் நித்திரைக்குள்
தயார்படுத்தப்பட்ட உன்னுடைய
புது உலகமே கனவு.....
உனக்கு பிடித்தபடி நீ வாழு
யாரும் தடுக்க வரமாட்டார்கள்.....
உன் சாம்ராஜ்ஜியத்தில் நீ
நினைத்தபடி ஆட்சியை நடத்து
உன் எதிரிகளை உன்
கனவுச் சிறைகளில்
சிறைப்படுத்தி சந்தோசப்படு...
உனக்குப் பிரியமானவர்களை
சந்திக்க இனிமையான
சந்தர்ப்பங்களை நீயே அமைத்துக் கொள்...
விதி கூட அங்கு விளையாட
முடியாதல்லவா?
அது உன் கனவல்லவா?
உனக்கு தேவையான போட்டிகளில்
நீ தாராளமாக பங்கு பற்றி
விரும்பிய வெற்றிகளை உனதாக்கிக் கொள்...
உன் இளமையைக் கூட திரும்ப
மீட்டிக் கொள் உன் சிந்தனையைப் போல
அங்கு யாரும் விமர்சனம்
செய்ய இருக்க மாட்டார்கள்....
உனது வலிகளை துடைத்து எறி
காயப்பட்ட இடங்களுக்கு நீயே
மருந்து இட்டுக்கொள்.... ஏனெனில்
விழித்தவுடன் வலிப்பது அவைகளே!


© siriuspoetry