...

2 views

சில நேரங்களில் நான்..
மனதின் தளத்தில்
புயல் சூழ்ந்தாலும்
புலன்களில் ஓர் அசுர அமைதி நிலவ
அயராது போராடும் என்னுயிர் வலி
எனக்கான பரிசு..

எனில் ஆதரிக்கும் என் சிந்தையே
மாபெரும் பித்து நிலையில் பிதற்றும்
மூளை நரம்பில் முதன்மையாக்கப்பட்ட
அத்துணை எதிர்மறை எண்ணங்களும்
நேரடியாக முகாமிடும்..

எதிரில் காண்பவர்
எதிர்பார்ப்பில் ஏமாற்றியவர்
ஏறாது போன பேராசை ஏணியின்
வழியில் குறுக்கே வந்தவர்கள் இப்படியாக பலர் வந்து கலரந்துரையாடுவர்..

தள்ளிவிடும் துக்கத்தின் பள்ளம்
ஆழமாய் உள்ளிழுக்கும்

அப்படியே மூச்சடக்கி கிடப்பேன்
சுவாசம் நிற்குமென

வாய்ப்பில்லாத சுக போக வாழ்வில்
சிறிது நேர நரக அனுபவமே
என்னை மீட்டுத் தந்து விடும்

ஒரேயொரு முறை என்னை மீட்க
நான் முன்வர வேண்டும்
அப்படியாக நான் என்னை காப்பாற்றிக் கொண்டேன்

மீள முடியாத அழுத்தங்களை
என் தெளிவின் சிந்தையால்
தேய்ந்திட்ட எல்லாமும் வளர்ந்திடும்
நேர்மறையாகுமென தீர்க்க நம்பிக்கையுடன்..
© kamal
#poem
#challenge

Related Stories