...

1 views

சண்டை செய்கிறேன்...
சத்தமின்றி ஓர் யுத்தம்....
ஹாஹா....
நீ நினைப்பதல்ல...
நான் கூறுகிறேன் கேள்....
நானே இரண்டாய் பிரிந்து யுத்தம் புரியவில்லை..
ஒன்றாக இருப்பதினால் தான்....
புரியவில்லையா....??
புரிய முயற்சித்து கொண்டிருக்கிறேன் நானும்....
இரண்டு பக்கம் நின்று தான் போர் செய்ய வேண்டுமென்பதில்லை...‌
ஒரே பக்கத்தில் நிற்பதாலும் போர் துவங்கலாம்....
ஒரே பக்கம் மட்டுமே நிற்பதால்...
இரசிப்பதால்....
அழுவதால்....
உடைவதால்....
பின் மீண்டும் எழுவதால்....
இச்சுழற்சி முறையில்....
ஒவ்வொரு முறையும் யுத்தம் செய்கிறேன்....
மூச்சுவிடும் சத்தமின்றி ....
சண்டை செய்கிறேன்....
என்னை நானே....

- ஆலோன் மகரி
© aalonmagari